Friday, March 21, 2014

எதுசரி அதுசரி - பகுதி 2: கன்றா? குட்டியா?


இன்றைய பேச்சில் முற்றிலும் வழிப் பெயர்ந்த ஒரு வழக்கத்தை இப்பகுதியில் பார்ப்போம். தமிழில் முந்நூறாயிரம் சொற்கள் மேலே இருக்க, நமது அறியாமையாலும், திடமான ஒழுக்கம் வரையரைபடாமலும் உரிய சொற்கள் இன்று புழக்கத்தில் இல்லை. இருப்பினும், நாம் சிறிய முயற்சி எடுத்தாலே இந் நழுவலை தவிர்த்து, இழந்ததை மீட்டெடுக்கலாம்.
    
விலங்கின இளமைப் பெயர்கள் சிலவற்றை காண்போம். பொதுவாக இன்று, நாம் எல்லா இளம் விலங்கினை "குட்டி" என கூறும் வழக்கம் சரியா ? பின் எதுசரி?

புல்லுண்டு தாவியோடும் விலங்கினங்களான, ஆடு, குதிரை, மான் போன்றவையின் இளம் பருவத்தினை "மறி" என அழைக்க வேண்டும். ஆக, ஆட்டுக் குட்டி அன்று ஆட்டு மறியே சரி!
 
இதுபோல், கழுதைக் குட்டி, யானைக் குட்டி என்பது சரியல்ல, கழுதைக் கன்று, யானைக் கன்று எனக் கூறுவதே சரி! 

இப்படி, கன்றா குட்டியா என்ற சிந்தனை ஒரு புறம் இறுக்க, நாம் "கன்றுக் குட்டியின்னு" ஒன்று வைத்துள்ளோமே? அடடா"!" அது சரியன்று.
 
மேலும், மனிதர்களுக்கு குழவி (Infant) என அழைப்பது சரி! இதன்படி, பிறந்த குழந்தையை பேணும் மருத்துவப் பிரிவினை குழவி இயல் (Neonatology) எனக் கூறலாமா?

  

No comments:

Post a Comment