Friday, September 13, 2013

006. மனநலம் மன்னுயிர்க் காக்கம்




தூய மனநலத்தின் சிறப்புகளை வள்ளுவ பெருந்தகை (Thiruvalluvar) 2000 ஆண்டுகளுக்கு முன்னரே தம்முடைய சிந்தனைகளாக நமக்கு அளித்துள்ளார். மேலே, குறிப்பிட்ட இரு குரள்களும் அதற்க்கு சான்றாக எடுத்துக் கொள்ளலாம். மனநலம் பொறுத்து ஏனைய வளங்கள் அமையும் எனவும், அச்சிறந்த மனநலத்தை நல்லதோர் சமூகம் பேணும் எனவும், அடிப்படை உளவியல் சிந்தனைகளை இவ்வாறு விவரித்துள்ளாரா என்று நாம் சிந்திக்கவேண்டும். சரி, இதற்கும் மேலே ஆழமான உளவியல் சிந்தனைகள் திருக்குறளில் உள்ளனவா என்று சற்று தேடலாம்.

பிறப்பு, இறப்பு, உணவு, நோய், மருந்து ஆகிய பல வாழ்வியல் அங்கங்களை ஆராய்ந்து, தமது சிந்தனைகளை தொகுத்தளித்த திருவள்ளுவர், உளவியல் நிகழ்வுகளையும் தெள்ள தெளிவாக தம் பாடல்களில் பதித்துள்ளார் என்றால் அது மிகையாகத்து. இந்நிகழ்வுகள்ளுக்கு அவர் இன்னதென்று தனி பெயர் சூட்டவில்லையே தவிர, சில உளவியல் நிகழ்வுகளை இடுக்கணழியாமை என்ற அதிகாரம் வழியாக நமக்கு தொகுத்துள்ளார் என்றே கூறலாம்.  இதுபோன்ற பல அரிய பைந்தமிழ் அறிவியல் மற்றும் மருத்துவ சிந்தனைகளை முறிவின்றி தொடர்ந்து மேம்படுத்தும் செயற்கரிய செயலை செய்யாமலே போனோம்.


"இடுக்கண் வருங்கால் நகுக அதனை

'இடுக்கண் வருங்கால் நகுக' என்று துன்பத்தை எதிர்கொள்ளும் ஒரு அணுகுமுறையை வெகு நேர்த்தியாக கூறியுள்ளார். இக்கால உளவியலில் [Psychology] விளக்கப்படும் பாதுகாப்புப் பொறிமுறைகளில் ஒன்றான நகைப்பாக (அதாவது, துன்பம் நேர்கையில் நகுதல்) [Humor, Level 4 Mature Defense Mechanisms] இருக்குமோ என்று செந்தமிழ் கூறும் நல்லுலகமும், உளவியல் ஆய்வாளர்களும் சேர்ந்துதான் கூறவேண்டும். உளவியல் நிகழ்வுகளை உற்று கவனித்து, நினைந்து, ஆராயாமல் இவ்வளவு தெளிவாக ஒருவரால் கூற இயலாது. ஆக, அச்சிறப்புகள் யாவும் வள்ளுவ பெருந்தகைக்கேச் சாரும்.



இன்னாமையை இன்பம் என எற்றுக் கொள்பவர்களை, அவர்களுடைய பகைவரும் சிறப்புடன் போற்றுவர் என்று நல்லறிஞ்சர்கள் விளக்கியுள்ளனர். இன்னாமையை இன்பம் என எப்படி எற்றுக் கொள்ள மூடியும்? அப்படி அக்காலத்தில் எற்றுக் கொண்டார்களா? இக்குறள் வழி சிந்தனையும், தற்கால உளவியலில் விளக்கப்படும் பாதுகாப்புப் பொறிமுறைகளில் ஒன்றான உயர்மடைமாற்றத்துக்கு (அதாவது, தான் உற்ற இடையூறை நேர்மறையாக எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் மாற்றிக்கொள்தல்) [Sublimation, Mature Defense Mechanisms] இணையான சிந்தனை என தோன்றுகிறது. இக்குறளில் உள்ள 'ஒன்னார் விழையுஞ் சிறப்பு' என்ற சீர்களின் பொருள், [அதாவது, பகையும் (உள்ளிட்ட அனைத்து சமூகமும்) சிறப்பிக்கும் வகை] உயர்மடைமாற்றத்துக்கு இணையாக நிலை நிறுத்துகிறது. இவ்வாறு, நேர்மறையாக மாற்றிக்கொள்வதால், இன்னாமையை இன்பம் என ஏற்றுக்கொள்ள இயலும். எடுத்துக் காட்டாக, தாகத்திற்கு தவறி தம்பியை இழந்த  தமையன் ஊரெங்கும் தண்ணீர் பந்தல் நிறுவும் செயல்.      



துன்பத்திற்கு ஆட்கொள்ளாதவர்கள் துன்பத்திர்க்கே துன்பம் விழைவிர்பார்கள் என கூறுகிறார். அனால், இக்குறளில் தோன்றும் 'இடும்பைக்கு  இடும்பை படாஅ தவர் ' என்ற சீர்கள் ஆய்வுக்குறியது என்பது தனிப்பட்ட கருத்து. இது தற்கால உளவியலில் விளக்கப்படும் பாதுகாப்புப் பொறிமுறைகளில் ஒன்றான ஒட்டா நிலைக்கு (அதாவது, உற்ற இடையூறும் அதை சார்ந்த உணர்வும் ஒட்டாதிருத்தல்) [Isolation of Affect, Anxiety Defense Mechanisms] இணையான சிந்தனையா என்று உளவியல் ஆய்வாளர்கள் ஆராய்ந்து கூறினால் சிறப்பு. 


மேலும், மனநிலை கெட உடல் நோகும் என்ற கருத்தும் தமிழர்களுக்கு புதிதல்ல. பைந்தமிழ் இலக்கியங்களில் தொடர்ந்து விவரிக்கபட்டும் ஒரு வகையான மனம் பொருந்திய உடல் மாற்றம், பசலை (பசப்பு). இதுபோக, பசப்புறுபருவரல் என்றொரு தனி அதிகாரத்தையே வள்ளுவ பெருந்தகை நமக்காக படைத்துள்ளார்.




எப்படி காதலனை பிரிவதினால் வரும் மனமாற்றத்தின் விளைவு மேனியில் பசலையோ, அது போல துன்பம் விழைவிக்கும் மனமாற்றத்தின் இலக்கமும் உடலா என நாம் எண்ணலாமா? அப்படி என்றால் மனநிலை மாற்றம் எவ்வாறு உடலுக்கு கேடு விளைவிக்கும் என்ற சிந்தனையின் அடிப்படையில் அண்மையில் உருவெடுத்தது தான் உளஉடல் மருத்துவம் [Psychosomatic Medicine]. இப் புதிய மருத்துவ பிரிவின் கீழ், சமூக மற்றும் உளவியல் காரணிகள் எவ்வித தாக்கங்களை உடல் நலத்தில் உருவாகுகின்றன என்பதை ஆராயவும், ஆயிந்து அதன் வழியே அதற்க்குரிய மருத்துவ முறைகளை கண்டறிவதுதான்.

உளவியல் நிகழ்வுகள், முளையில் ஏற்ப்படும் வேதியல் மாற்றங்களை தழுவியே நிகழும் என்பது இன்றைய பொது கருத்து. நரம்பணுவியல் [Neuroscience] தற்பொழுது படிப்படியாக முன்னேற்றம் அடைந்திருந்தாலும், மனித மூளையின் இயக்கங்கள் குறித்து முழுமையாக இன்னமும் நாம் அறியவேண்டியது பல உள்ளன. இவ்வாண்டு (2013), மனித மூளையின் இயக்கங்களை புத்தம் புதிய நரம்பணுவியல் தொழில்நுட்பங்களை கொண்டு  துள்ளியமாகா அறிந்துக்கொள்ள தொடங்கப்பட்ட ஒரு கூட்டு முயற்ச்சியானது மூளை இயக்கங்கள் திட்டம் [BRAIN initiative aka. Brain Activity Map Project] (மேற்கோள்: க). குறிப்பிடும் வகையில், இது வரை இல்லாத பெரிய அளவிற்கு இம் முயற்ச்சிகள் உந்தப்பட்டுள்ளது.

இன்றைய நரம்பணுவியல், எவ்வாறு தனிப்பட்ட நரம்பணுக்கள் மூளையில் செய்திகளை உள்வாங்கி மருமொழிகின்றன என்ற அளவே கூறுகின்றது. ஆனால், இத் திட்டத்தின் மூலம், முதல் முறையாக மூளையில் உள்ள தனிப்பட்ட நரம்பணுகளின் இயக்கங்கள் விளைவாக ஏற்படும் கருத்து உருவாக்கம் (thought process) நுணுக்கங்களையும் நேரடியாக கண்டு புரிந்துக்கொள்ள இயலும் என எதிர்ப்பார்க்க படுகிறது. கருத்து உருவாக்கம் நுணுக்கங்கள் அறிந்தால், அது மனித வாழ்விர்க்கே அச்சாணியாக விளங்கும் மனம் என்னும் உட்ப்பொருளை காணும் அரிய வழி.  ஆக, உளவியலிலும், நரம்பியலிலும் நிரவியுள்ள பற்பல புதிர்களுக்கு இத் திட்டம் பொருள் விளக்கும் என நம்பப்படுகிறது.  



மேற்கோள்
. Research priorities. The NIH BRAIN Initiative.  Insel TR, Landis SC, Collins FS.  Science. 2013 May 10;340(6133): 687-8