Monday, January 6, 2014

007. புளிங்காய் வேட்கைத்து - மசக்கை


"நீர் உறை கோழி நீலச் சேவல்
கூர் உகிர்ப் பேடை வயாஅம் ஊர
புளிங்காய் வேட்கைத்து அன்று நின்
மலர்ந்த மார்பு இவள் வயாஅ நோய்க்கே".

[ஐங்குறுநூறு 51, ஓரம்போகியார், மருதத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது]


மசக்கை வேட்கை (pica) என்பது சூல் (கர்ப்பம்) தரித்த சில மகளிர்கள், இயல்பற்ற உணவோ பொருட்களோ உண்ணுவது. மேற்கண்ட ஐங்குறுநூறு மருதத் திணை பாடலில், நோய்யுற்று (அல்ல சூல் தரித்து) புளிங்காய் வேட்கை கொள்ளும் நிகழ்வை வெகு சிறப்பாக ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஓரம்போகியார் எடுத்துரைத்துள்ளார். 

மசக்கை வேட்கையின் வாழ்வியல் நிகழ்வுகளின் தமிழ் இலக்கியப் பதிப்புகள் நம் வரலாற்றில் முந்தி இருந்தாலும், இதன் காரணிகள் இன்றும் சரிவர புரிந்துக்கொள்ளப்படவில்லை. 

இயல்பற்ற உணவோ பொருட்களோ உண்ண ஏற்படும் வேட்கையின் (craving) காரணிகள் எல்லா வகை மக்கள்களுக்கும் போதுவானவை என்றால்லும், உட்க்கொள்ளும் உணவோ பொருட்களோ ஏனையப்  பண்பாட்டை தழுவியே காணபடுகிறது. இவ்வாறு, புளியங்காய், மாங்காய் உண்ணுவது தமிழ் பண்பாட்டைச்  சார்ந்தது. தமிழ் இலக்கிய வரலாற்றில் இவ்வகை நிகழ்வுகளை விவரித்திருந்தாலும், இதற்கென்று புளி உண்ணல் -puliphagia, மாங்காய் உண்ணல் -mangophagia என தனிப் பெயரிட்டு தற்கால உளவியலில், மருத்துவத்தில் இன்றுவரை விளக்கப்படவில்லை.

இருப்பினும், மசக்கை வேட்கையின் காரணிகளைபற்றிய ஒரு சில கணிப்புகள் தற்கால மருத்துவத்தில் கூறப்படுகிறது. அவற்றில் ஒன்று நுண் ஊட்டச்சத்து (தாதுச் சத்து / micronutrients) பற்றார்குறை (மேற்கோள்: க). கர்பிணி பெண்களைத்தாண்டி, இதுபோன்ற வேட்கை குழந்தை பருவத்தில்லும் (மண் உண்ணல் / Geophagy), ஒரு சில மன அழுத்தம் பெற்ற பெண்கள் இடையேயும் காணபடுகிறது. 

பள்ளி, கல்லூரிப் பாடத்திட்டத்தில் தமிழ் இலக்கிய பாடங்கள் பெரும்பாலும் வாழ்க்கை நெறிகள், கலை, காதல், வீரம், பண்பாடு போன்ற வாழ்வியல் அங்கங்களை கொண்டுள்ளது. இதைத் தாண்டி அறிவியல் அங்கங்களையும் பொதுத் தமிழ் பாடத்திட்டத்தில் செர்த்துக்கொள்வது சாலச் சிறந்தது.


மேற்கோள்
. Toward a comprehensive approach to the collection and analysis of pica substances, with emphasis on geophagic materials. Young SL, et. al. PLoS One. 2008 Sep 5;3(9):e3147



1 comment: